1. அறுபது ஆண்டுகளில் இது இருபத்தியோராவது ஆண்டாகும்.
2. சர்வஜித் ஆண்டின் அதிதேவதை : ஜ்யோதிஷ்மான்
3. அதிதேவதையின் நிறம் : சிவப்பு
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : அழகிய கைகள், நீண்ட மூக்கு, நீள்
முகம், மெல்லிய உதடு, எல்லாச்
செயல்களையும் சாதிக்க வல்ல
தோற்றம்.
முகம், மெல்லிய உதடு, எல்லாச்
செயல்களையும் சாதிக்க வல்ல
தோற்றம்.
5. சர்வஜித் ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
அரசனின் கௌரவம் காப்பவன், விழாக்களைக் கொண்டாடுபவன், மாசற்றவன், பருத்த உடம்பையுடையவன், மேனியழகு மிக்கவன், எப்பொழுதும் பகைவரை வெல்லும் முயற்சியில் ஈடுபட்டவன்.
22. சர்வதாரி ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது இருபத்தியிரண்டாவது ஆண்டாகும்.
2. சர்வதாரி ஆண்டின் அதிதேவதை : விபாஸன்
3. அதிதேவதையின் நிறம் : சிவப்பு
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : சிவந்த கண்கள், உயரமான மேனி,
சிறுத்த உதடு, சிறிய கண்கள்,
பயிர்த் தொழில் புரிபவர்.
சிறுத்த உதடு, சிறிய கண்கள்,
பயிர்த் தொழில் புரிபவர்.
5. சர்வதாரி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
செல்வம், ஆள், அடிமை மிக்கவன், எல்லா யோகங்களையும் துய்ப்பவன், அழகிய மேனி கொண்டவன், இனிமையான உணவை உட்கொள்பவன், நற்குணங்கள் மிக்கவன் மற்றும் கொடியவனும் ஆவான்.
23. விரோதி ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது இருபத்தி மூன்றாவது ஆண்டாகும்.
2. விரோதி ஆண்டின் அதிதேவதை : கஸ்யபன்
3. அதிதேவதையின் நிறம் : சிவப்பு
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : மங்கிய கண்கள், பருத்த உடல்,
பருத்த இடுப்பு, சிறுத்த கழுத்து.
பருத்த இடுப்பு, சிறுத்த கழுத்து.
5. விரோதி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
ஆசையுடையவன், தேசாந்திரங்களில் சஞ்சரிப்பவன், குடும்ப சுகமற்றவன், அதிக அயோக்கியத்தனமுடையவன், மக்களுடன் ஒத்துச் செல்லும் மனநிலையுடையவன், சொந்த புத்தியற்றவன்.
24. விக்ருதி ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது இருபத்தி நான்காவது ஆண்டாகும்.
2. விக்ருதி ஆண்டின் அதிதேவதை : ரவி
3. அதிதேவதையின் நிறம் : சிவப்பு
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : நெடிய உருவம், அழகிய மேனி,
தவக்கோலம், ஒட்டிய வயிறு,
நீள் கழுத்து, சிவந்த கண்கள்.
தவக்கோலம், ஒட்டிய வயிறு,
நீள் கழுத்து, சிவந்த கண்கள்.
5. விக்ருதி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
செல்வமற்றவன், பயங்கரத் தன்மை கொண்டவன், நீண்ட கணுக்கால்களை உடையவன், அதிக ஆர்வம் கொண்டவன், நல்ல புத்தியற்றவன், பகைவர்களை உடையவன்.
25. கர ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது இருபத்தியைந்தாவது ஆண்டாகும்.
2. கர ஆண்டின் அதிதேவதை : சூரியன்
3. அதிதேவதையின் நிறம் : சிவப்பு
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : நான்கு கைகள், வரதம், அபயம்,
பத்மம் கதையைக் கொண்டவர்,
நதிக்கரை தேவாலயத்தில்
உள்ளவர்.
பத்மம் கதையைக் கொண்டவர்,
நதிக்கரை தேவாலயத்தில்
உள்ளவர்.
5. கர ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
காமம் மிக்கவன், அழுக்கடைந்த மேனி, கொடூர வார்த்தை மற்றும் அர்த்தமற்ற பேச்சுக்கள் உடையவன், வெட்கங்கெட்டவன், கட்டுப்பாடற்றவன், அதிக உயரமுடையவனுமாவான்.
26. நந்தன ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது இருபத்தியாறாவது ஆண்டாகும்.
2. நந்தன ஆண்டின் அதிதேவதை : பானு
3. அதிதேவதையின் நிறம் : சிவப்பு
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : சிவந்த கண்கள், நீண்ட கைகள்,
வரதஹஸ்தம், நீள்மூக்கு, விபூதி
ருத்ராக்ஷம் அணிந்தவர்.
வரதஹஸ்தம், நீள்மூக்கு, விபூதி
ருத்ராக்ஷம் அணிந்தவர்.
5. நந்தன ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
குளங்கள், குட்டைகள், கிணறுகள், வீடுகள் இவைகளைக் கட்டுபவன், அன்னதானப்பிரியன், மாசற்றவன், மனைவி மக்களால் இன்பம் துய்ப்பவன்.
27. விஜய ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது இருபத்தியேழாவது ஆண்டாகும்.
2. விஜய ஆண்டின் அதிதேவதை : ககன்
3. அதிதேவதையின் நிறம் : சிவப்பு
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : இரு கைகள், தாமரையையொத்த
மேனி, இடது பக்கப் பார்வை,
மருத மரத்தடியில் இருப்பவர்.
மேனி, இடது பக்கப் பார்வை,
மருத மரத்தடியில் இருப்பவர்.
5. விஜய ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
போர் புரிபவன், தைரியசாலி, நற்குணங்கள் மிக்கவன், அரசனால் வெகுமதிக்கப்படுபவன், சிறந்த பேச்சாளி, சிறந்த கொடையாளி, இரக்கமுடையவன், பகைவனை வெல்பவனுமாவான்.
28. ஜய ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது இருபத்தியெட்டாவது ஆண்டாகும்.
2. ஜய ஆண்டின் அதிதேவதை : பூஷா
3. அதிதேவதையின் நிறம் : சிவப்பு
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : பருத்த இடுப்பு, சிவந்த கண்கள்,
வரத அபயஹஸ்தம்.
வரத அபயஹஸ்தம்.
5. ஜய ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
பெரியவர்கள் பிரசங்கம் செய்யும்பொழுது வருந்துபவன், வெகுமதிக்கத் தக்கவன், வள்ளல், பகைவரின் கர்வத்தை ஒடுக்குபவன், காமம் மிகுந்தவன், மன வலிமை உடையவன்.
29. மன்மத ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது இருபத்தி ஒன்பதாவது ஆண்டாகும்.
2. மன்மத ஆண்டின் அதிதேவதை : ஹிரண்யகர்பன்
3. அதிதேவதையின் நிறம் : பொன்னிறம்
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : தாமரை மலரையொத்த கண்கள்,
திரண்ட புஜங்கள், வில்லும்
அம்பும் ஏந்தியவர், ஐந்து
குதிரைகள் மீது அமர்ந்தவர்.
திரண்ட புஜங்கள், வில்லும்
அம்பும் ஏந்தியவர், ஐந்து
குதிரைகள் மீது அமர்ந்தவர்.
5. மன்மத ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
சிறந்த அணிகலன்களை அணிந்தவன், பெண்களுடன் கேளிக்கை புரிபவன், இனிய சொல்வன்மை மிக்கவன், கலைஞன், நாட்டியம், பாட்டு இவைகளில் ஈடுபாடு உள்ளவன், நல்ல உணவில் நாட்டம் உள்ளவன்.
30. துர்முகி ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது முப்பதாவது ஆண்டாகும்.
2. துர்முகி ஆண்டின் அதிதேவதை : மரீசி
3. அதிதேவதையின் நிறம் : சிவப்பு
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : இரு கரங்கள், வில்லுடன்
கூடியவர், தெத்துப் பற்கள்,
பயங்கர உருவம், உதிக்கும்
சந்திரனைப் போல் ஒளி,
சோம்பேறியான தோற்றம்.
கூடியவர், தெத்துப் பற்கள்,
பயங்கர உருவம், உதிக்கும்
சந்திரனைப் போல் ஒளி,
சோம்பேறியான தோற்றம்.
5. துர்முகி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
கொடூரமான மனம் உள்ளவன், அயோக்கியன், ஈன புத்தியுள்ளவன், பேராசைக்காரன், கோணலான முகம், கை, கால்கள் உள்ளவன், பாவச் செயல்களில் ஈடுபாடு உள்ளவன், கெடுதலான செயல்களையே செய்பவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக